மோசடியின் பிரதான சூத்திரதாரி இலங்கையின் முன்னாள் பிரதமரா ??

இலங்கை மத்திய வங்கி பிணை முறி விநியோகச் செயற்பாடுகளில் இடம்பெற்ற மோசடிகளின் பிரதான சூத்திரதாரியாக ரணில் விக்கிரமசிங்கே இருந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி பிணைமுறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புத்தம் ஒன்றிலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கான அனைத்து சாட்சியங்களையும் தனது புத்தகத்தில் இணைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.